0 0
Read Time:1 Minute, 38 Second

திருவெண்காடு: பூம்புகார் தீயணைப்பு நிலையம் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே புதிய கட்டிடம் கட்ட ரூ. 2 கோடியே 75 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மணிக்கிராமம் பகுதியில் கட்டிடம் கட்ட நிலத்தையும் ஒதுக்கியது.

புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் வடிவேல் தலைமை தாங்கினார். சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பூம்புகார் தீயணைப்பு நிலைய அலுவலர் துரைமுருகன் வரவேற்றார்.நிகழ்ச்சியில், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கட்டிடப்பணியை தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் கட்டுமான உதவி பொறியாளர் சுந்தர், தொழில்நுட்ப அலுவலர் அன்புசெழியன், சமூக ஆர்வலர் மங்கை வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாய சங்க தலைவரும், தி.மு.க. பிரமுகருமான செல்வம் பிள்ளை நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %