0 0
Read Time:1 Minute, 18 Second

தமிழகத்தில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக எம்.பி வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாநிலங்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது பேசிய அவர், சென்னை மாநகரம் பெரு நகரங்களுள் ஒன்றாக விளங்குவதால், புல்லட் ரயில்களை நிறுவ வேண்டியது காலத்தின் தேவை என குறிப்பிட்டார்.

சென்னை – மும்பை,சென்னை – டெல்லி, சென்னை – கொல்கத்த்தா இடையே புல்லட் ரயில் திட்டங்களை செயல்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ​வேண்டும் எனவலியுறுத்திய அவர், ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கிட வேண்டும் என்றார்.

தமிழக மக்கள் பாதிக்கப்படாத வகையில் இரண்டு ஆண்டுகளில் திட்டங்கள் முடிவடைய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %