0 0
Read Time:1 Minute, 37 Second

கடலூர், பாதிரிக்குப்பம் குமாரப்பேட்டையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 46). இவர் வழிசோதனைப்பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 25-ந் தேதி பாதிரிக்குப்பத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் கலந்து கொண்ட முத்துக்குமார், தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்தார். இதில் அவர் எதிர்பாராதவிதமாக தீக்குண்டத்திற்குள் தவறி விழுந்தார்.

இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். உடனே அங்கிருந்த பொதுமக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %