0 0
Read Time:1 Minute, 29 Second

சென்னை சூளைமேடு, ஜவஹர்லால் நேரு தெருவை சேர்ந்தவர் ஜோதிராமலிங்கம். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குரோம்பேட்டையில் வசிக்கும் தனது மகனை பார்க்க சென்றார்.

நேற்று காலை சூளைமேடு திரும்பி வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் அலங்கோலமாக கிடந்தன.

வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்து, பீரோவில் இருந்த 78 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சூளைமேடு போலீசில் ஜோதி ராமலிங்கம் புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் போலீசார் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %