0 0
Read Time:1 Minute, 30 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திலிருத்து ONGC நிர்வாகம் உடனடியாக வெளியேற வேண்டும் என தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமலும் பொது மக்களின் அனுமதி இன்றியும் ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமலும் மயிலாடுதுறை மாவட்டம் வைபட்டவர்த்தி பகுதியில் விவசாய நிலங்களை அழித்து ராட்சச இயந்திரங்களை கொண்டு ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியை துவங்க தயார் நிலையில் இருக்கின்ற ONGC நிர்வாகம் உடனடியாக வெளியேற வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டிகோபி தெரிவித்துள்ளார்.

விரைவில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் களத்தில் இறங்கி மக்களுக்காக குரல் கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %