0 0
Read Time:1 Minute, 26 Second

பூந்தமல்லி, ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மீரா (வயது 40). இவர் பி.எட்., படித்து முடித்து விட்டு ஆசிரியர் வேலை தேடி வந்தார்.

இந்த நிலையில் மீராவிடம் அவருக்கு அறிமுகமான மதுரவாயலை சேர்ந்த சுந்தரகுமார் (47), அவரது மனைவி பிரியா (37) மற்றும் ராணிப்பேட்டையை சேர்ந்த சுகுமாரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2019-ம் ஆண்டு கோயம்பேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து ரூ.10 லட்சம் பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, 3 பேரும் வேலை வாங்கித் தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்ததாக மீரா கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கோயம்பேடு போலீசார் சுந்தரகுமார் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சுகுமாரனை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %