0 0
Read Time:1 Minute, 20 Second

வேதாரண்யம் அருகே செம்போடை மேற்கை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது45). இவர் ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவருடைய மனைவி சுந்தரி (42). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று உடல் நிலை சரியில்லாததால் ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த பூச்சிமருந்தை (விஷம்) எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்-இன்ஸ்பெக்டர் தேவபாலன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %