0 0
Read Time:1 Minute, 24 Second

மயிலாடுதுறை நாராயணப்பிள்ளைத் தெருவில், கூட்டுறவுத்துறை சார்பாக ரூ.85 இலட்சம் மதிப்பீட்டில் கட்டடப்பட்டுள்ள மயிலாடுதறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கட்டடத்தினை மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி, பார்வையிட்டார்.

இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா,பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா.எம். முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் என்.செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வே.பெரியசாமி, துணைபதிவாளர்கள் த.ராஜேந்திரன், ஆர்.மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %