0 0
Read Time:2 Minute, 24 Second

தரங்கம்பாடி, ஏப்ரல்- 05;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எடுத்துகட்டு சாத்தனூரில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் பைலட் செய்திருந்தார்.

எடுத்துக்கட்டி சாத்தனூர் ஆத்துப்பக்கம் பூதனூர் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. மாணவ மாணவியர்கள் தொண்டர்கள் ஒவ்வொரு வீடாக, ஒவ்வொரு தெருக்களுக்கும் சென்று சுத்தம் செய்து, பாதுகாப்பான முறையில் வாழ்வதற்கான சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றி எடுத்துக்கூறி அறிவுரைகளையும் வழங்கினர். அதன் முடிவு நாளான நேற்று பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவருக்கு டி பி எம் எல் கல்லூரியின் மாணவ மாணவியர்கள் பட்டாசுகள் வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல் மாலிக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்எம்.சித்திக், தரங்கை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் பாரி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %