0 0
Read Time:1 Minute, 11 Second

விருத்தாசலத்தை அடுத்த, கார்குடல் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் வினோத்குமார்(வயது 22). லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று மார்க்கெட் கமிட்டி எதிரே நின்று கொண்டிருந்தபோது விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த செந்தில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் முன்விரோதம் காரணமாக வினோத்குமாரை அசிங்கமாக திட்டி தாக்கினர்.

இதில், மனமுடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %