0 0
Read Time:1 Minute, 51 Second

சோழவரம் அருகே, பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்று தொப்புள் கொடியுடன் வீசிச் சென்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த அத்திப்பேடு தனியார் மருத்துவமனை கழிவறையில் பிறந்து சில மணிநேரமே ஆன பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரவு 10.30 மணிக்கு கர்ப்பிணி ஒருவர் மருத்துவமனைக்கு வந்து, சிறிது நேரத்திலேயே பிரசவம் முடிந்தது போல சாதாரணமாக வெளியே சென்றது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அந்த பெண் கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சாய்ராபானு என்று தெரியவந்தது. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில், 4ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்து விட்டதாகவும், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டு கருவுற்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

2ஆம் தேதி பிரசவ வலி வந்ததால் தனியார் மருத்துவமனைக்கு வந்து, கழிவறைக்கு சென்று தனக்கு தானே குழந்தையை பிரசவித்து வீசி சென்று விட்டதாக கூறி திடுக்கிட வைத்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %