0 0
Read Time:1 Minute, 28 Second

கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட் ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்டத்தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர்கள் சேரன், பி.பி.கே.சித்தார்த்தன், ஜெயச்சந்தி ரன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வர்கள் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து, கியாஸ் சிலிண்டர், மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

இதில் தலைமை பேச்சாளர் மோகன்தாஸ், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். முடிவில் நகரத்தலைவர் பாலதண்டாயுதம் நன்றி கூறினார்.

நிருபர்:பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %