0 0
Read Time:1 Minute, 28 Second

கடலூர், முதுநகர் செல்லங்குப்பம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் கீர்த்திவாசன் (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் லெனின் (39). நண்பர்களான இவர்கள் 2 பேரும் அடிக்கடி ஒன்று சேர்ந்து மது குடித்து வந்துள்ளனர். இதற்கு அதிக அளவில் லெனின் செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் நண்பர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் லெனின் கீர்த்திவாசனை தகாத வார்த்தைகளால் திட்டியதாடு, கீழே கிடந்த பாட்டிலை எடுத்து உடைத்து குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து கீர்த்திவாசன் அளித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லெனினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %