0 0
Read Time:2 Minute, 0 Second

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா தாண்டவன்குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் சந்தோஷ் குமார் (வயது 31). பொக்லைன் டிரைவரான இவருக்கும் சிதம்பரம் அடுத்த மேலக்குண்டலப்பாடி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகள் ஜெயலட்சுமி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ஜெயலட்சுமி 3 மாத கர்ப்பமாக உள்ளார்.

இந்த நிலையில் சந்தோஷ்குமார் தனது மனைவியுடன் நேற்று தனது மாமனார் வீட்டுக்கு வந்தார். மாலையில் மாமனார் வீட்டு கழிப்பறையில் இருந்த பல்பு எரியவில்லை.

இதையறிந்த சந்தோஷ்குமார் பல்புக்கு செல்லும் மின்ஒயரை சரிபார்த்தபோது, எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சந்தோஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %