1 0
Read Time:1 Minute, 46 Second

சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மயிலாடுதுறையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் M. விவேக் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் M.S. ராஜசேகரன் மாவட்ட செயலாளர் Jc. மதுபாஸ்கர் மாவட்ட இணை செயலாளர் M. கோபி மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக திரளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிடவும் இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் மாதாந்திர தோறும் மரக்கன்றுகள் நடவும் பொதுமக்களுக்கு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு அறிந்து அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பல்வேறு நலப்பணிகளை செய்யுமாறு மாவட்ட தலைமையின் சார்பில் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %