0 0
Read Time:1 Minute, 14 Second

மணல்மேடு, அடுத்த பாண்டூர் வடக்குவெளியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி முத்துலட்சுமி(வயது 77). இவர், சம்பவத்தன்று கொண்டல் வாய்க்கால் மதகடி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் ஒன்று அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே முத்துலட்சுமி உயிரிழந்தார். உடனே, மினி பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மணல்மேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய மினி பஸ் டிரைவர் ஆனந்தகுடியை சேர்ந்த சதீஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %