0 0
Read Time:1 Minute, 55 Second

கடலூர், தென் மேற்கு வங்க கடல் அதனை ஒட்டிய வட இலங்கை கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. கடலூரில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் மழை பெய்தது. இந்த மழை விட்டு, விட்டு காலை 10 மணி வரை பெய்தது. இதேபோல் லால்பேட்டை, பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதை பார்க்க முடிந்தது.

இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 10.8 மில்லி மீட்டர் மழை பெய்தது.

மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

வடக்குத்து-9, கலெக்டர் அலுவலகம் – 8.6, கொத்தவாச்சேரி- 4, குப்பநத்தம் – 3.6, ஸ்ரீமுஷ்ணம்- 3.2, லால்பேட்டை -3, வானமாதேவி -2.6, குடிதாங்கி -2.5, பண்ருட்டி -2, பெலாந்துறை, சேத்தியாத்தோப்பு தலா 1, அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை தலா 0.6.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %