0 0
Read Time:1 Minute, 19 Second

மணல்மேடு அருகே, உள்ள திருவாளப்புத்தூருக்கும், நடுத்திட்டுக்கும் இடையே உள்ள சாலையோரம் முள்செடிகள் அதிகளவு வளர்ந்து சாலையை ஆக்கிரமித்து இருந்தது.

இதனால், அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களை முட்கள் கிழித்து வந்தன. மேலும், மரக்கிளைகள் அடர்ந்து வளர்ந்து இருந்ததால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையும் ஏற்பட்டது. இதனால் இந்த வழியாக மயிலாடுதுறை, கும்பகோணம், சீர்காழி, சிதம்பரம், காட்டுமன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சென்று வந்தனர்.

ஆகவே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள முட்செடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் சாலையை ஆக்கிரமித்த முள்செடிகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %