0 0
Read Time:1 Minute, 53 Second

திரு.வி.க.நகர், கடந்த 9-ந் தேதி அம்பத்தூர், அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் கம்பெனி ஊழியர் விஜயகுமார் (வயது 37) என்பவரை கத்தியால் தாக்கி ரூ.82 லட்சத்தை 3 பேர் கொண்ட கும்பல் பறித்து சென்றனர். இது குறித்து அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் 2 மாதங்களுக்கு முன்பு அதே கம்பெனி ஊழியரை தாக்கி ரூ.5 லட்சம் பறித்து சென்ற வழக்கில், அங்கு 3 வருடமாக வேலை செய்து வந்த சுப்ரமணியன் என்பவரை மதுரவாயல் போலீசாரால் கைது செய்து சிறையில் அடைத்தது தெரியவந்தது. தற்போது ஜாமீனில் வெளியே உள்ள சுப்ரமணியம் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அதில், கொள்ளையடித்த வழக்கில் சிறையில் இருந்த போது, கஞ்சா வழக்கில் சிறையில் இருந்த பள்ளிக்கரணை சேர்ந்த அப்புன் என்கிற ஸ்ரீகாந்த் (19) என்பவருடன் சுப்ரமணியனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தற்போது ஜாமீனில் வெளியே வந்த நிலையில், சுப்ரமணியன் ஆலோசனைப்படி, ஸ்ரீகாந்த் தனது நண்பர்கள் 2 பேருடன் ரூ.82 லட்சத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.

பணத்துடன் தலைமறைவாக உள்ள ஸ்ரீகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %