0 0
Read Time:1 Minute, 6 Second

திட்டக்குடி அருகே, உள்ள நெய்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி வளர்மதி(வயது 55). இவர் சம்பவத்தன்று நெய்வாசலில் உள்ள வசந்த் என்பவரின் கரும்பு வயலில் உள்ள மோட்டாரில் குளிக்கச் சென்றார்.

அப்போது அவருக்கு திடீரென வலிப்பு வந்து வாய்க்கால் தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதைப்பார்த்த அருகில் உள்ள வயலில் எள் அறுவடை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடி வந்து வளர்மதியை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %