0 0
Read Time:1 Minute, 16 Second

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகைய்யா (வயது 48). இவர், குன்றத்தூரில் ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவர், ஆதம்பாக்கம் போலீசில் புகார் மனு அளித்தார் – அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ஆன்-லைன் மூலமாக ஜெர்மனியை சேர்ந்த மத்தியாஸ் கட்ஸ்மித் மற்றும் பூஜா குமாருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஜனவரி மாதம் இருவரும் ரசாயன மருந்து பொருட்களை அனுப்பி வைப்பதாக கூறியதால் ரூ.35 லட்சத்து 23 ஆயிரத்தை அவர்களுக்கு அனுப்பி வைத்தேன்.

ஆனால் அவர்கள், போலியான ரசாயன மருந்து பொருட்களை அனுப்பி மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையடுத்து ஆதம்பாக்கம் போலீசார் அந்த புகார் மனுவை மேல் விசாரணைக்காக சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %