0 0
Read Time:1 Minute, 19 Second

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில், அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் கலெக்டர் லலிதா தலைமையில் அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் சமத்துவ நாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

இதேபோல சீர்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் மண்டல தாசில்தார் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %