0 0
Read Time:1 Minute, 32 Second

மயிலாடுதுறை, ஏப்ரல்- 15;
ராமநவமி ஊர்வலங்களின் போது குஜராத் ஜார்க்கண்ட் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அமைப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள் மீது நடைபெறும் தொடர் தாக்குதல்களை கண்டித்து மயிலாடுதுறையில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முகமது பைசல் தலைமை தாங்கினார்.

மேலும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். பின்னர் இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுவோரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %