0 0
Read Time:1 Minute, 33 Second

மயிலாடுதுறை: அண்ணல் அம்பேத்கர் படம் கிழிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி, நாணல்படுகை கிராமம் புதுத்தெருவில் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அம்பேத்கரின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. அந்த உருவப்படத்தை மர்ம நபர்கள் யாரோ கிழித்து விட்டனர். இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 70) என்பவர் வக்கீல் செந்தில்குமார் மற்றும் 50-க்கும் மேற்பட்டவர்களுடன் சென்று கொள்ளிடம் போலீசில் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு போலீஸ்லாமேக், கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்தநிலையில், அம்பேத்கர் படத்தை கிழித்தவர்களை கைது செய்யக்கோரி கொள்ளிடம் போலீஸ் நிலையம் அருகே உள்ள பெருமாள் கோவில் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %