0 0
Read Time:2 Minute, 16 Second

டெல்லி: தேர்தலில் அமோக வெற்றி பெற்று வரும் திமுகவுக்கு வாழ்த்து என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மையான தொகுதிகளில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகளுடன் முன்னணி வகித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, திமுக 152 இடங்களிலும் அதிமுக 81 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. தி.மு.க கூட்டணி வேட்பாளர்களின் மகத்தான் வெற்றியைத் தொடர்ந்து, தமிழக மக்களுக்காக பணியாற்றி வரும், ஸ்டாலினின் அயராத உழைப்புக்கு இன்று அரியணை தேடி வந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, ஸ்டாலினுக்கு மகுடம் சூட்டியுள்ளது. இந்த வெற்றியானது ஸ்டாலின் மீதான தமிழக மக்களின் மனநிலை பிரதிபலித்துள்ளது. இதனால் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக முதல்வராக பதவியேற்க இருக்கிறார். அவருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தேர்தலில் அமோக வெற்றி பெற்று வரும் திமுகவுக்கு வாழ்த்து என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டர் பதிவில், தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் வெற்றி தகுதியானது. உங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்து உங்களை தேர்வு செய்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %