0 0
Read Time:1 Minute, 6 Second

கடலூர், சிதம்பரம் அருகே நற்கரவந்தன்குடியை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 65). தொழிலாளி. இவருடைய மூத்த மகன் ரமேஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த வீரமுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று தனது வீட்டுக்கு பின்புறம் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கி விழுந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் கிள்ளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %