0 0
Read Time:1 Minute, 24 Second

சிறுபாக்கத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித்தரப்படும் என்று அமைச்சர் கணேசன் உறுதியளித்தார்.

சிறுபாக்கம், மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுபாக்கம் ஊராட்சியில் அமைச்சர் சி.வெ.கணேசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை கிராம மக்கள் வழங்கினர்.

அதனை பெற்றுக் கொண்ட அமைச்சர் சி.வெ.கணேசன், சட்டசபை கூட்டம் முடிந்தவுடன் சிறுபாக்கம் ஊராட்சியில் வார்டுகள் தோறும் ஆய்வு செய்து, குடிநீர், கழிவுநீர் வடிகால், சாலை, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றித்தரப்படும் என உறுதி அளித்தார்.

அப்போது, மங்களூர் ஒன்றியக்குழு தலைவர் சுகுணா சங்கர், தி.மு.க. ஒன்றிய செயலர்கள் சின்னசாமி, செங்குட்டுவன், ஊராட்சி செயலாளர் மருதமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் பாப்பாத்தி ராமலிங்கம், ஜோதி, ஊராட்சி தலைவர்கள் கவிதா விஜயகுமார், தேவராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %