0 0
Read Time:3 Minute, 26 Second

கடலூர், ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். அவர் 3-வது நாள் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதற்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள். அதன்படி இந்த ஆண்டு மார்ச் 2-ந்தேதி தவக்காலம் தொடங்கியது.

இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதன் திருப்பலி நடந்தது. கடந்த பத்தாந்தேதி குருத்தோலை ஞாயிறு கிடைபிடிக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தியபடி பவனி வந்தனர். கடந்த 14-ந்தேதி கட்டளை வியாழன், 15-ந்தேதி புனித வெள்ளி வழிபாடு நடந்தது. தவக்காலத்தின் இறுதி நாளாகவும், ஏசு கிறிஸ்து சிலுவையில் சிலுவையில் அறையப்பட்டு மறைந்து, 3-வது நாள் உயிர்தெழுந்ததை குறிக்கும் ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கடலூர் கார்மேல்அன்னை ஆலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு, மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. கிறிஸ்தவர்களும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி தேவாயலத்திற்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதேபோல் ஆற்காடு லுத்தரசன் திருச்சபையில் அருட்தந்தை சேகரன் கிறிஸ்டோபர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. மேலும் தூய எபிபெனி ஆலயம், சாமிப்பிள்ளைநகர் தூய இடைவிடா சகாய அன்னை ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

பண்ருட்டி பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை மரிய ஆனந்தராஜ் தலைமையில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி காட்டுமன்னார்கோவிலில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் பங்குதந்தை ஸ்டீபன்ராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

இதேபோல் தூய சிலுவை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை யொட்டி மறைதிரு வின்சென்ட் தலைமையில் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %