0 0
Read Time:2 Minute, 22 Second

பண்ருட்டி, கள்ளக்குறிச்சி – உளுந்தூர்பேட்டை அருகே, உள்ள நெய்வனை கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி மகன் விஜய்(வயது 27). தெருக்கூத்து கலைஞர்.

இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட தெருக்கூத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடித்தார்.

பின்னர் நேற்று மதியம் 2 மணி அளவில் அந்த ஊரில் உள்ள ஒரு மாந்தோப்பு பகுதிக்கு விஜய் சென்றார். அங்கு 13 வயதுடைய 8-ம் வகுப்பு மாணவி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். இதைபார்த்ததும் அந்த மாணவி மீது விஜய்க்கு ஆசை ஏற்பட்டது.

இதையடுத்து அந்த மாணவியிடம் சென்று அவர் நைசாக பேச்சுக்கொடுத்துள்ளார். பின்னர் திடீரென மாணவியின் வாயை பொத்தி அவரை மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது.

அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவர் இதனை பார்த்து சத்தம் போடவே, விஜய், அந்த மாணவியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் இதுபற்றி சிறுமியின் தாய் முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஜய்யை கைது செய்தனர். பின்னர் அவர் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %