0 0
Read Time:1 Minute, 1 Second

முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை மாத திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.

அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகமும், சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது. மேலும், காவிரி துலாக்கட்டத்தில் இருந்து சக்தி கரகம், அலகுகாவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் ஓம்சக்தி, பராசக்தி என பக்தி பரவசத்துடன் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை அம்மனுக்கு செலுத்தினர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %