0 0
Read Time:1 Minute, 16 Second

புவனகிரியில் பஸ்சி்ல் மயங்கி விழுந்த நகை மதிப்பீட்டாளர் பரிதாபமாக இறந்தார்.

புவனகிரி, பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவை சேர்ந்தவர் தினகரன் (வயது 55). இவர் வடலூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் பரங்கிப்பேட்டையில் இருந்து ஒரு பஸ்சில் தினகரன் புவனகிரிக்கு புறப்பட்டு சென்றார்.

அந்த பஸ் தம்பிக்குநல்லான்பட்டிணம் கிராம பகுதியில் சென்றபோது தினகரன் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அதே பஸ்சில் சிகிச்சைக்காக புவனகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தினகரனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %