1 0
Read Time:2 Minute, 41 Second

சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில்

நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் ஆர்.பிரியா கூறியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் சேகரமாகும் குப்பைகளில் மக்கும் குப்பைகள் மாநகராட்சியின் நுண்ணியிர் உரம் தயாரிக்கும் மையங்களுக்கு அனுப்பப்பட்டு, அவற்றிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கடந்த 4-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 15 ஆயிரத்து 534 கிலோ இயற்கை உரங்கள் விற்பனை செய்யப்பட்டு மாநகராட்சிக்கு ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 80 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

மேலும், உலர் கழிவுகளை வள மீட்பு மையங்கள், பொருட்கள் மீட்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. அந்தவகையில் கடந்த 4-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 2 லட்சத்து 79 ஆயிரத்து 832 கிலோ உலர் கழிவுகள் விற்பனை செய்யப்பட்டு ரூ.17,82,210 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

அதேபோல், பொது வெளியில் விதிகளை மீறி குப்பைகளை கொட்டிய 478 நபர்களிடமிருந்து கடந்த 14 நாட்களில் ரூ.2,78,800 அபராதமும், கட்டிடக் கழிவுகளை கொட்டிய 159 நபர்களிடமிருந்து ரூ.3,32,387 அபராதமும், சுவரொட்டிகள் ஒட்டிய 130 நபர்களிடமிருந்து ரூ.53,100 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 49 பெருமளவு குப்பைகள் உருவாக்குபவர்களிடமிருந்து ரூ.1,27,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர் டாக்டர் எஸ்.மனிஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
50 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
50 %