0 0
Read Time:1 Minute, 23 Second

வெளிப்பாளையம், கிராம சபை கூட்டங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

தேசிய அளவில் பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளில் வருகிற 24-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த உறுதிமொழி எடுத்தல், வறுமை இல்லா ஊராட்சியினை உருவாக்குதல் குறித்த விவாதம், அனைத்து வயதினருக்கும் நல்வாழ்வு திட்டங்கள், அனைத்து குழந்தைகள் பாதுகாப்பு, அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் இணைப்பு, உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %