0 0
Read Time:1 Minute, 47 Second

நன்னிலம் அருகே ரெயில் என்ஜினில் அடிபட்டு லாரி டிரைவர் உயிரிழந்தார்.

நாகை மாவட்டம் ராராந்திமங்கலம் புதுத்தெருவை சேர்ந்தவர் சிங்கராயன். இவருைடய மகன் ராஜ்குமார்(வயது35). திருப்பூரில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்த ராஜ்குமார் கடந்த சில
நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்தார். நேற்று ராஜ்குமார்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நடுவச்சேரி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் உடல் நசுங்கி இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ வடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ராஜ்குமார் நேற்றுமுன்தினம் நள்ளிரவு மயிலாடுதுறையில் இருந்து கீழ்வேளூர் நோக்கி சென்ற ரயில் என்ஜினில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது தந்தை சிங்கராயன் அளித்த புகாரின் பேரில் ரயில்வே போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %