0 0
Read Time:1 Minute, 46 Second

மயிலாடுதுறை கூறைநாடு சந்தரிகுளத் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 85). இவர் மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கோவிந்தம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் , நிலைதடுமாறி சாலையில் விழுந்த கோவிந்தம்மாள் மீது அந்த வழியாக வந்த மொபட் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தம்மாளை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவிந்தம்மாள் மருமகன் மனோகரன் கொடுத்த புகாரின்பேரில், மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன், கோவிந்தம்மாள் மீது மொபட்டை ஏற்றிய மயிலாடுதுறை ரயிலடி காவேரி நகரைச் சேர்ந்த ரம்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மூதாட்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %