0 0
Read Time:2 Minute, 17 Second

சிதம்பரம் அருகே மதுபோதையில் பெண்ணை கட்டையால் அடித்துக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்

சிதம்பரம் அருகே, வடக்குமாங்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 42). தொழிலாளி. இவருடைய மனைவி தீபா (38). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஆனந்தனுக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஆனந்தனுக்கும், தீபாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஆனந்தன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தனது மனைவி என்றும் பாராமல் தீபாவை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த தீபா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இருப்பினும் மதுபோதையில் மனைவி இறந்தது கூட தெரியாமல் தீபாவின் உடல் அருகில் ஆனந்தன் படுத்து தூங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அண்ணாமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தீபாவின் தாய் தமயேந்தி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %