0 0
Read Time:1 Minute, 40 Second

அண்ணாமலைநகர், சிதம்பரம் அண்ணாமலை நகர் மருத்துவக்கல்லூரி சாலை மற்றும் முத்தையா நகர் அருகில் உள்ள ஓம் சக்தி நகர் பகுதிகளில் மாணவர்கள் வீடு வாடகை எடுத்து தங்கி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர்கள் சிலரின் அறைகளில் இருந்த மடிக்கணினி, செல்போன்கள், வாட்ச், பென்டிரைவ் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனது.

இது குறித்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன், ஏட்டுகள் மணிகண்டன், சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா, உடையராஜபாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 26), ஒந்துகுகன் (26), மஞ்சுநாதன் (25) ஆகிய 3 பேரும் மாணவர்களின் மடிக்கணினி உள்ளிட்டவற்றை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 4 மடிக்கணினிகள், 8 செல்போன்கள், வாட்ச், பென்டிரைவ் உள்ளிட்ட சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %