0 0
Read Time:1 Minute, 17 Second

கதண்டுகள் கடித்ததில் காயமடைந்த 19 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

குத்தாலம் ஒன்றியம், கருப்பூர் ஊராட்சியில், 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் கருப்பூர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதில், அந்த பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது வாய்க்காலின் அருகே உள்ள வயல் பகுதியில் உள்ள மரத்திலிருந்து பறந்து வந்த கதண்டுகள் 100 நாள் திட்டப்பணியில் ஈடுபட்டிருந்தவர்களை கடித்தது. இதில், காயமடைந்த மேலகருப்பூர் அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த அந்தோணியம்மாள் (வயது 60), சிவலிங்கம் (60), செல்வமேரி (65), சந்தானம் (70) உள்பட 19 பேர் ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %