0 0
Read Time:1 Minute, 37 Second

சிறுபாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுபாக்கத்தில் விவசாயிகள் நலன் கருதி தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இதனை அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி தங்களது நெல்மூட்டைகளை விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எவ்வித அறிவிப்பும் இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் திடீரென மூடப்பட்டது. இதனால் வருவாய் ஆவணங்கள் மூலம் முன் பதிவு செய்து நெல் மூட்டைகளை விற்பனைக்காக வைத்திருந்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று முன்னாள் ஊராட்சி துணை தலைவர் மனோகரன் தலைமையில் அங்கு ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்கக் கோரி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %