0 0
Read Time:1 Minute, 58 Second

ஆவடி அடுத்த, பாலவேடு காலனியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 40). இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2½ வயதில் ரியாஸ் குமார் என்ற மகனும், 2 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். நேற்று மாலை ராஜேஸ்வரி வீட்டின் முன்பு 2 மாத குழந்தையை குளிக்க வைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது ரியாஸ் குமார் வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் மகன் வீட்டுக்கு வராததால், ராஜேஸ்வரி வீட்டின் பின்புறத்தில் தேடிப் பார்த்தார். மகனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை தேடினர். அப்போது வீட்டின் பின்புறம் 4 அடி ஆழத்திற்கு தோண்டி வைக்கப்பட்டு இருந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது. மேலும், அந்த இடத்தில் ஈரமான தரையில் சிறுவனின் கால் தடம் இருப்பதை பார்த்த போலீசார் தண்ணீருக்குள் இறங்கி தேடினர்.

இதில் சிறுவன் பிணமாக மீட்கப்பட்டார். இதுபற்றி முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %