0 0
Read Time:2 Minute, 5 Second

திட்டக்குடி, வேப்பூரை அடுத்த மாளிகைமேடு கிராமத்தைச்சேர்ந்தவர் சுப்பிரமணியராஜா. நாம் தமிழர் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டசெயலாளரான இவர் கடந்த 3-ந் தேதி ஜா.ஏந்தல் கிராமத்தில் சேதமடைந்த மின்கம்பம் குறித்து மின்வாரிய வாட்ஸ்-அப் குழுவில் பதிவிட்டு சரிசெய்யக்கோரினார்.

இதைப்பார்த்த அடரி துணைமின்நிலைய இளநிலை மின்பொறியாளர் ரவீந்திரன், சுப்பிரமணியராஜாவை போனில் தொடர்புகொண்டு ஆபாசமாக திட்டியதாகவும், இதுகுறித்து திட்டக்குடி கோட்ட செயற்பொறியாளரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் திட்டக்குடி கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்வு முகாம் விழுப்புரம் மண்டல தலைமைப் பொறியாளர் செல்வசேகர் தலைமையில் நேற்று நடந்தது.

அப்போது இந்த முகாமில் கலந்துகொள்ள வந்த நாம் தமிழர் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியராஜா தலைமையில் கட்சியினர் இளநிலை மின்பொறியாளர் ரவீந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோட்ட அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தலைமைப்பொறியாளரிடம் புகார் மனு கொடுத்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமைப்பொறியாளர் செல்வசேகர் தெரிவித்தார் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %