0 0
Read Time:1 Minute, 22 Second

கடலூர், பண்ருட்டியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மற்றும் பண்ருட்டி வட்ட பொதுநல அமைப்புகள் ஆலோசனை கூட்டம் அர்ச்சுனன் தலைமையில் பண்ருட்டியில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட தலைநகரான கடலூர் ரெயில் நிலையத்திலும், வர்த்தக நகரமான பண்ருட்டி ரெயில் நிலையத்திலும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் முன்பு வருகிற 4-ந் தேதி(புதன்கிழமை) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது.

போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள வி.கே.டி. சாலையை உடனடியாக சீரமைக்ககோரி அனைத்து மக்களையும் திரட்டி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் பொதுநல அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %