0 0
Read Time:1 Minute, 12 Second

மணல்மேடு அருகே, உள்ள பூதங்குடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், மணல்மேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் அதனை ஓட்டி வந்தவர் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

பின்னர், அந்த மோட்டார் சைக்கிளில் போலீசார் சோதனையிட்டதில் 621 பாட்டில்களில் சாராயம் இருந்தது. பின்னர், அந்த சாராய பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய ஆத்தூர் பகுதியை சேர்ந்த ரவி மகன் ரகுராமன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %