0 0
Read Time:1 Minute, 6 Second

குண்டர் சட்டத்தில் ரவுடி கைது செய்யப்பட்டாா்.

காட்டுமன்னார்கோவில், குமராட்சி அருகே, கத்திரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 35). ரவுடியான இவர், கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி தெற்கு மாங்குடி கிராமத்தில் 2 பேரை கத்தியால் வெட்டி கொல்ல முயன்றார்.

இது தொடர்பாக குமராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கார்த்திக் மீது கொலை முயற்சி வழக்கு, மணல் கடத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே கார்த்திக் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கான நகல் மத்திய சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %