0 0
Read Time:2 Minute, 40 Second

புவனகிரி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் புவனகிரியில் நடைபெற்றது. முகாமிற்கு கடலூர் மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் மீரா தலைமை தாங்கினார்.

புவனகிரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் டாக்டர் மனோகர், அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சிவகுமார், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பால.அறவாழி, முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புவனகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கந்தன் வரவேற்றார்.

முகாமில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

இதில் மருத்துவக்குழுவினர் பங்கேற்று மகப்பேறு, கண், தொண்டை, எலும்பு முறிவு, பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து சிகிச்சை அளித்தனர். முகாமில் கீரை, பழ கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.

முகாமில் செயல் அலுவலர் அருள்குமார், தி.மு.க. நகர துணை செயலாளர் சண்முகம், பொருளாளர் எழில்வேந்தன், மாவட்ட பிரதிநிதி செல்லபாண்டியன், கவுன்சிலர்கள் காளிமுத்து, ராமச்சந்திரன், அண்ணாஜோதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர இணை செயலாளர் வெற்றிமாறன், நகர பொருளாளர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் செந்தில், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் நடராஜன், துணை அமைப்பாளர் அரவிந்தன், டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தி.மு.க. நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முடிவில் பேரூராட்சி மன்ற துணை தலைவர் லலிதாமணி நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %