0 0
Read Time:1 Minute, 41 Second

மயிலாடுதுறையில், முன்அறிவிப்பு எதுவுமின்றி அடிக்கடி ஏற்படும் மின் வெட்டை கண்டித்து மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் கலந்துகொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பருத்தி விவசாயம் பாதிக்காமல் இருக்க தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்வெட்டு செய்யக்கூடாது. தேர்வுக்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
100 %