0 0
Read Time:1 Minute, 26 Second

பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில், குற்ற வழக்குகள் சம்பந்தமான ஆவணங்கள் வைப்பது மற்றும் கம்ப்யூட்டரில் வழக்குகள் சம்பந்தமாக பதிவு செய்யும் அறை உள்ளது.

இந்த அறையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பணியில் இருந்த போலீசார், உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மதுரவாயல் தீயணைப்பு நிலைய வீரர்கள், கம்ப்யூட்டர் அறையில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் அந்த அறையில் இருந்த வழக்கு சம்பந்தமான முக்கிய ஆவணங்கள், ஏ.சி. எந்திரம் ஆகியவை தீயில் எரிந்து நாசமானது.

தீ விபத்து தொடர்பாக பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என தெரியவந்தது. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %