0 0
Read Time:1 Minute, 9 Second

மயிலாடுதுறை மாவட்டம், பட்டமங்கலம் ஊராட்சி சீனிவாசபுரத்தில் கூடுதல் ரேஷன் கடைகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பட்டமங்கலம் ஊராட்சி சீனிவாசபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் அதிகளவில் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.

இதனால் இந்த கடையில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இதனால் பொருட்கள் வாங்க வரும் முதியவர்கள், பெண்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக நிற்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் கூடுதல் ரேஷன் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள்,
மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %