0 0
Read Time:1 Minute, 50 Second

ஆலந்தூர், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து விமானம் வந்தது. அதில் 164 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து வந்தபோது அதில் பயணம் செய்த தஞ்சாவூரைச் சேர்ந்த சேவியர் (வயது 54) என்பவர் விமான கழிவறைக்கு சென்று திடீரென சிகரெட் பிடிக்க தொடங்கினார்.

இதையடுத்து விமானத்தில் இருந்த சகபயணிகள், அவர் புகைப்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே விமான பணிப்பெண்கள் அங்கு வந்து, விமான பாதுகாப்பு சட்டப்படி விமானத்துக்குள் புகைப்பிடிக்கக்கூடாது என்ற விதி உள்ளதை அவரிடம் எடுத்து கூறினா்.

மேலும் இதுபற்றி விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். பின்னர் சென்னை விமான நிலையத்தில் குவைத் விமானம் தரை இறங்கியதும் அங்கு தயாராக நின்ற பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்துக்குள் ஏறி புகைப்பிடித்த பயணி சேவியரை விமானத்தில் இருந்து கீழே இறக்கி பாதுகாப்புடன் குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனையை முடித்த பிறகு அவரை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். சேவியரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %