0 0
Read Time:1 Minute, 20 Second

கடலூர் முதுநகரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். கடலூர் முதுநகர் அன்னவெளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரகுமார் (வயது 38), கூலி தொழிலாளி.

சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த வீரகுமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை எடுத்து குடித்து விட்டாா். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வீரகுமார் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீரகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %